வியாழன், 27 டிசம்பர், 2012

நம்பிகை மோசடி


களை எடுத்ததும்
எரு இட்டதும்
இதற்காகத் தானா?

நீர் விட்டதும்
காத்திருந்ததும்
இதற்காகத்தானா?

மனிதனே
உன் கைகளின்
சுயத்தை
அறுவடை நாளில்
காட்டி விட்டாயே!

2013 முதல்....

நீண்ட நாட்களாக என் வலைப்பூ பக்கமே வராமல் தலைமறைவாகி விட்டேன். ஒரு புலோக் ஆராம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த வேகமும் ஆர்வமும் அதை தொடர்ந்து நிர்வகிக்க வேண்டும் என்பதில் சுணங்கி விட்டது.....

ஆனாலும் 2013 தொடங்கி இப்பக்கத்தை தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்துள்ளேன். இனி எனது எல்லா படைப்புகளையும் எழுத்த்களையும் இங்கேயே விட்டுச் செல்லலாம் என்று நினைக்கிறேன்.